தீக்குள் விரலை வைத்தால்…மாலன்.

நா விச்வநாதன்
வைத்தால்…மாலன்.

அம்ருதா. டிச 17
~
நா.விச்வநாதனின் புனைவுவெளி:சி.சு.செல்லப்பா முதல்
தஞ்சை ப்ரகாஷ் வரை.
~
எழுத்தாளனின் மனோபாவம், பின் அவனது
தோற்றம்,படைப்புகள் பற்றிய விச்வநாதன்
மதிப்பீடு, அவரது சந்திப்பின் போது கிடை
த்த தனிப்பட்ட அனுபவம், முத்தாய்பாய் ஓர்
அழுத்தமான வரி அல்லது சொல் இப்படி
வரிசை கோர்த்துக் கொண்டு விரிகின்றன
கட்டுரைகள்…….
……………
புதுமைப்பித்தனைப் பற்றிய மிகையோ
காழ்ப்போ அற்ற சரியான மதிப்பீடு இது.
இதற்குமேல் புதுமைப்பித்தனைப் பற்றி
ஓர் இளம் வாசகனோ எழுத்தாளனோ
அறிந்து கொள்ள ஏதுமில்லை.அவர் கதை
கள் உட்பட. வாசிப்பில் தாகம் கொண்டவன்
இந்த வரிகளைப் பின்புலமாகக் கொண்டு
புதுமைப்பித்தனை வாசிப்பானேயானால்
வாசிப்பு துலக்கம் பெறும்.
எனக்கு மணிக்கொடி எழுத்தாளர்கள்மீது
கேள்விகள் உண்டு.விமரிசனங்கள் உண்டு.
இன்று காலாவதியாகிப் போய்விட்ட எழு
த்து அவர்களுடையது…. க.நா.சு தூக்கிப்
பிடித்த ரசனை மாறியிருக்கிறது. அவர்கள்
‘அழுக்கைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்கள்’
என்பதால் அவர்களிடம் கற்க ஏதுமில்லை…
வரலாற்று அறிவுக்கன்றி ஒருவன் இன்று
மணிக்கொடிக்காரர்களை வாசிக்க வேண்
டிய அவசியமில்லை.ஆனாலும்கூட,
அவர்களுக்காகவும் இந்நூலைப் பரிந்துரைப்
பேன்.காரணம், ஒரு குழு என்று தட்டையாக
ஒற்றைச் சொல்லில் அறிமுகப் படுத்தப்படும்
அவர்களுக்குள் பன்முகத்தன்மை இருந்தது
என்பதை உணர்த்த. தனிப்பட அவர் பெற்ற
அனுபவங்களைப்பற்றி எழுதியுள்ள இடங்க
ளால் புத்தகம் செழுமைபெறுகிறது…..

புனைவு வெளி:’ சி.சு செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை’ நா.விச்வநாதன்.

பேசும் புதியசக்தி பதிப்பகம்.
29பி ஏஎன்ஆரா காம்ளக்ஸ்
தெற்குவீதி திருவாரூர்.
₹ 150.
pesumpudhiyasakthi@gmail.com
9443973671

பின்னூட்டமொன்றை இடுக