Kurshith Majeed
- நீர் மேல் நடந்தான்
நம்புக
அவனுக்கு காதல் பேய் பிடித்திருக்கிறது. - மின்னுயர்த்தி
இரண்டாவது தட்டில்
திறந்து கொண்டது
முறைத்தபடி இறங்கிக் கொண்டன
புதுக் கவிதையும்
மரபுக் கவிதையும் - இரண்டு இலைகளை சுருட்டி
கூடமைத்தது கனவு.
வேறு வழியில்லை
இயற்கையை பாடத் தொடங்கினான் கவிஞன். - காற் சட்டையின் அடிபப் பகுதியை மடித்துக் கொண்டான்
சுரியில் புதைந்து விடாமல்
நீருள் மிக மெதுவாக அடி வைத்தான்
கண்டல் தாவரத்தின் அடிப பகுதியில் மாட்டியிருந்த அவள் அன்பை
கவனமாக பிரித்தெடுத்து
பத்திரமாக கரை சேர்த்தான். - அவள் ஞாபகங்களை சூரணம்.செய்து
தேனோடு குழைத்து
இரு தேக்கரண்டி
சாப்பாட்டிற்கு பின் அருந்தினான்
அவன் தீரா ரோகம நீங்கி
மனத்துள் பூக்கள் வெடித்தன. - ‘அவளின்றி இனிமேவ் வராதே
வெளியே போ…’
பிடரியை பிடித்து
பலங் கொண்டு தள்ளினான்
நிலை தடுமாறி சுவரில் மோதி
மல்லாக்க விழுந்து துடித்தது கனவு. - அவன் கடலை குடித்து முடித்திருந்தான்
அவள் பற்றிய தாகம்
இன்னும் அடங்கியிருக்கவில்லை. - அவன் திகட்ட திகட்ட
அன்பை கொடுக்க தீர்மானித்திருந்தான்
அவள் பாதியில் எழுந்திருக்க
மீதி அன்பு பழுது படாதிருக்க
அப்பிள் அடுக்குகளின் நடுவே
குளிர் பதள பெட்டியில் வைத்தான். - புதிதாக ஏதேனுமொன்றை நிகழ்த்தும் எதிர்பார்க்கையுள்ளதால்
இவ்விரவுள் எப்படியாவது
கடந்து விடவேண்டும்
இப் பெரு வலியை. - இரண்டாவது கிளாசில்
ஒரு மிடறு மிச்சமிருக்க
வாயை புறங்கையால் இழுத்து துடைத்தான்
வலுத்த பொரித்த மாமிசத்தை வலிந்து கடித்திழுத்தான்
ரீவியின் சனல் மாற்றினான்
எளியவர்களை வலியவர்கள்
சுட்டுக் கொண்டிருந்தார்கள்.
மிகத் தீர்க்கமாகவே முணு முணுத்தான்
‘இப் பூமி நிதானமற்றிருக்கிறது’.