லிடியா டவிஸ் குறுங்கதைகள் / தமிழில் : சமயவேல்

மலைகள்

[ A+ ] /[ A- ]

கவிஞர் சமயவேல்

lydia davis

தலை, இதயம்

தலை அழுகிறது.

இதயத்திற்கு உதவ தலை முயற்சிக்கிறது.

தலை இதயத்திடம் சொல்கிறது இது எப்படி, மீண்டும்:

நீ நேசிப்பவர்களை நீ இழந்துவிடுவாய். அவர்கள் எல்லோரும் போய்விடுவார்கள்.

ஆனால் பூமியும் கூடப் போய்விடும், ஏதோ ஒருநாள். பிறகு, இதயம் ஆறுதலாக உணர்கிறது.

ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் காதுகளில் நெடுங்காலம் அங்கேயே இருப்பதில்லை.

இதயத்திற்கு இது மிகவும் புதியது.

அவைகள் திரும்ப எனக்கு வேண்டும், இதயம் சொல்கிறது.

இதயத்திடம் இருப்பதெல்லாம் தலை மட்டுமே.

தலையே, உதவு. இதயத்திற்கு உதவு.

குழப்பத்தின் உதாரணங்கள்

1

எனது ஹோட்டல் அறையை ஒட்டி இருக்கும் குளியலறையின் தரை மேல் நான் உட்கார்ந்திருக்கிறேன். அனேகமாக விடிந்துவிட்டது மேலும் குடிப்பதற்கு என்னிடம் மிக அதிகமாக இருந்திருந்தது, அதனால் குறிப்பிட்ட எளிய விஷயங்களும் என்னை ஆழமாக ஆச்சர்யப்படுத்தியது. அல்லது அவைகள் எளிமையானவை அல்ல. ஹோட்டல் மிக அமைதியாக இருக்கிறது. எனக்கு முன்னால் டைல்ஸ்கள் மேல் உள்ள எனது பாதங்களை நான் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அவை அவளது பாதங்கள். நான் எழுந்து நின்று கண்ணாடியில் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அங்கு அவள் இருக்கிறாள். அவள் உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

பிறகு நான் புரிந்துகொண்டேன் மேலும் என்னிடமே கூறுகிறேன்: இது உனக்கு வெளியில் இருந்தால் நீ அவள் என்று கூற வேண்டும். உனது பாதம் அங்கு அதிகம் இருந்தால், அது உன்னிடமிருந்து அங்கே வெளியில் இருக்கிறது, அது அவளது பாதம். கண்ணாடியில், உனது முகத்தைப் போன்ற ஏதோ ஒன்றைப் பார்க்கிறாய். அது அவளது முகம்.

02

ஒரு சிறிய மின்சாரத் துண்டிப்பில், எனது சொந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது போல நான் உணர்கிறேன் மேலும் நான் சிந்திக்க இயலாமல் ஆகியது. மின்சாரத் துண்டிப்பு நான் செய்திருந்த எனது வேலையை மட்டும் அழிக்கவில்லை ஆனால் எனது சொந்த ஞாபகத்தின் ஒரு பகுதியையும் அழித்திருக்கிறது என நான் அஞ்சுகிறேன்.

04

அங்கு அவனது வலது கால் எனது வலது கால் மேல், எனது இடது கால் அவனது வலது கால் மேல், அவனது இடது கை எனது முதுகுக்கு அடியில், எனது வலது கை அவனது தலையைச் சுற்றி, எனது வலது கை அவனது வலது கைக்குக் குறுக்காக, மேலும் எனது வலது கை அவனது இடது நெற்றிப்பொட்டைத் வருடிக் கொண்டிருந்தது. இப்பொழுது எந்த உடம்பின் எந்தப் பாகம் என்னுடையது மேலும் எந்தப் பாகம் அவனுடையது என்பதைக் கூறுவது கடினமாக ஆகிறது.

நான் அவனது தலையை உரசுகிறேன் என்னுடையதின் மேல் அழுந்தியிருப்பதால், அவனது மயிரிழைகள் அவனது மண்டையோடு மேல் உரசுவதை நான் கேட்கிறேன் எனது சொந்த மயிரிழைகள் எனது சொந்த மண்டையோட்டின் மேல் உராய்வது போல, இப்பொழுது நான் அவனது காதுகளைக் கொண்டு தான் கேட்பதைப் போல, மேலும் அவனது தலைக்கு உட்புறம் இருந்து.

05

நான் போகும் போது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்திருந்தேன். நான் களைப்புடன் இருக்கிறேன் மேலும் அது ஒரு சிறிய புத்தகம் என்றாலும் அதை நான் எப்படிக் கொண்டு போவேன் என்று யோசிக்க முடியவில்லை. போவதற்கு முன்பு நான் அதை வாசிக்கிறேன், மேலும் வாசித்தேன்:

அவள் எனக்குக் கொடுத்த மங்கிய பித்தளைக்குள் வார்க்கப்பட்ட டஜன் கணக்கிலான பூக்களுடன் கூடிய புராதன வளையல். இப்பொழுது நான் நினைக்கிறேன் நான் வெளியே செல்லும் போது எனது மணிக்கட்டைச் சுற்றி நான் புத்தகத்தையும் அணிந்து கொள்ள முடியும் என்று.

இவளது அம்மாவின் அம்மா

1

அங்கு இவள் அன்பானவளாக இருக்கும் நேரங்கள் உண்டு, ஆனால் அங்கு இவள் அன்பானவளாக இல்லாமல் இருக்கும் நேரங்களும் உண்டு, அவனிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் இவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருக்கும் போது, மேலும் அது அப்போது இவளுக்குள் இருக்கும் இவளது அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை இவள் அறிந்திருந்தாள்.

அங்கு இவளது அம்மா அன்பானவளாக இருந்த நேரங்கள் உண்டு, ஆனால் இவளிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் அவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்த நேரங்களும் அங்கு இருந்தன, மேலும் அது அப்போது இவளது அம்மாவுக்குள் இருந்த இவளது அம்மாவுடைய அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை அவள் அறிந்திருந்தாள். இவளது அம்மா கூறினாள், சில சமயங்களில் இவளது அம்மாவின் அம்மா அன்பானவளாக இருந்து வந்தாள், அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பரிகாசம் செய்தாள், ஆனால் அவளும் கூட கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்து வந்தாள். மேலும் அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டினாள்.

2

இவளது அம்மாவின் அம்மா, இரவில், பின்னிரவில், அழுவதும் அவளது கணவரை மன்றாடுவதும் வழக்கமாக இருந்தது. இதை இவளது அம்மா, இன்னும் ஒரு இளம்பெண், படுக்கையில் இருப்பவள் கேட்டுக் கொண்டிருந்தாள். இவளது அம்மா, அவள் பெரியவளாகிய போது, அழவும் அவளது கணவரை மன்றாடவும் இல்லை, அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கேட்கக் கூடிய இடத்தில் அவளது மகள் இல்லை. பின்னாளில் அவளது மகள், இவள் பெரியவளாகிய போது, இவளது அம்மாவின் அம்மாவைப் போல இரவில், பின்னிரவில் அழுதாளா, இவளது கணவரைக் கெஞ்சி மன்றாடினாளா இல்லையா என்று. இவளது அம்மாவால் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவளால் கேட்க முடியாது.

000

காதல்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவனின் மேல் ஒரு பெண் காதல் கொண்டாள். அவனது கோட்டுகளைத் துவைப்பது, அவனது மைக்கூடைத் துடைத்து வைப்பது, அவனது தந்த சீப்பை அழுக்கெடுப்பது எல்லாம் அவளுக்குப் போதவில்லை: அவனது புதைகுழி மேல் ஒரு வீட்டைக் கட்டவும் இரவுக்கு மேல் இரவு ஈர நிலவறையில் அவனோடு உட்கார்ந்திருக்கவும் வேண்டி இருந்தது.

உருமாற்றம்

அது சாத்தியம் இல்லை, எனினும் அது நிகழ்ந்தது; மேலும் திடீரென இல்லை, ஆனால் மிக மெதுவாக, ஒரு அதிசயம் அல்ல, ஆனால் ஒரு மிக இயற்கையான விஷயம், அது சாத்தியமற்றது எனினும். எங்கள் நகரத்தில் உள்ள ஒரு பெண் ஒரு கல்லாக மாறிவிட்டாள். ஆனால் அதற்கு முன்பும் கூட அவள் ஒரு சாதாரணமான பெண்ணாக இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை: அவள் ஒரு மரமாக இருந்தாள். இப்பொழுது ஒரு மரம் காற்றில் அசைகிறது. ஆனால் செப்டம்பர் முடிவதற்கு அருகில் ஏதோ ஒருசமயம், இனிமேலும் அவள் காற்றில் அசையாமல் இருக்கத் தொடங்கினாள். பல வாரங்களுக்கு அவள் கொஞ்சம் கொஞ்சம் அசைந்தாள். பிறகு அவள் அசையவே இல்லை. அவளது இலைகள் விழுந்த போது அவை திடீரென, மேலும் பயங்கர சப்தத்துடன் விழுந்தன.

அவை கூழாங்கற்கள் மீது மோதின மேலும் சில சமயங்களில் உடைந்து சிதறின மேலும் சில சமயங்களில் முழுமையாக இருந்தன. அவை விழுந்த இடத்தில் அங்கு ஒரு தீப்பொறி இருந்திருக்கும் மேலும் அவைகளுக்குப் அருகில் கொஞ்சமாக ஒரு வெள்ளைப் பொடி கிடந்தது. மக்கள், நானில்லை எனினும், அவளது இலைகளை சேகரித்தார்கள் மேலும் அவற்றை அடுப்பங்கரை மாடத்தில் போட்டு வைத்தார்கள். ஒவ்வொரு அடுப்பங்கரை மாடத்திலும் கல் இலைகள் கொண்ட ஒரு நகரம் அங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பிறகு அவள் சாம்பல் நிறத்தில் மாறினாள்: முதலில் நாங்கள் அதை ஒரு ஒளியென்று நினைத்தோம்.

சுருக்கம் விழுந்த நெற்றிகளோடு, எங்களில் இருபது பேர் ஒரே நேரத்தில் ஒரு வட்டமாக அவளைச் சுற்றி நின்று எங்கள் கண்களுக்கு நிழலூட்டுவோம், தாழ்த்தப்பட்ட எங்கள் தாடைகள்–மேலும் எங்களிடையே நாங்கள் கொண்டிருந்த ஒரு சில பற்கள், பார்ப்பதற்கான ஏதோ ஒன்றாக அது இருந்தது—மேலும் அது, அந்த நாளின் நேரம் அல்லது மாறிக்கொண்டிருக்கும் பருவம் அவளை சாம்பல் நிறத்தில் காணுமாறு செய்துவிட்டது என்று கூறினோம். ஆனால் விரைவில் அது தெளிவாகிவிட்டது, இப்பொழுது இவள் வெறும் சாம்பல் நிறம், அதே தான், இனிமேல் இவள் பெண்ணில்லை என்றும் இப்பொழுது இவள் வெறும் ஒரு மரம் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒத்துக் கொண்ட அதே வழியில்.

ஆனால் ஒரு மரம் என்பது ஒரு விஷயம் மேலும் ஒரு கல் என்பது இன்னொரு விஷயம். சாத்தியமற்ற விஷயங்களில் கூட, நீங்கள் ஒத்துக்கொள்ளக் கூடியதற்கும் இங்கு ஒரு எல்லை இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக